இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாம்பளும் எழுதி ரொம்ப நாள் (வருஷம் )ஆச்சே.ன்னு வந்தேன்…வழக்கம் போல நமக்கு பிடிச்ச சினிமா.ல இருந்து ஆரம்பிப்போம். ….சமீபத்தில நான் பார்த்த சினிமாக்களின் ஒரு குறு விமர்சனம்….
தெய்வதிருமகள்
அப்பா எனும் குழந்தைக்கும் மகள் எனும் மனுஷிக்கும் இடையில் ஏற்படும் சட்ட போராட்டம் தான் கதை. விக்ரம் மற்றும் சாரா தான் படத்தின் உயிர் நாடிகள்…பிரமிக்க வைக்கும் நடிப்பு …..அனுஷ்காவிற்கும் வித்தியாசமான பிரேக் எடுத்த ஒரு அனுபவம் இருந்து இருக்கும் (நமக்கும் தான்) ..சந்தானம் பாதி படம் முழுவதும் வரக்கூடிய வாய்ப்பு…நன்றாக உபயோக படுத்தி இருக்கிறார்..
ஹிட்டு: விக்ரம், சாரா, சந்தானம், அனுஷ்கா, இசை, ஒளிப்பதிவு
குட்டு: M S பாஸ்கர் சந்தேகப்படுவது,அவர் பின்னாடி மனம் மாறுவதற்கு காரணம் சொல்லாதது…தேவை இல்லாத அனுஷ்கா பாடல்….
கேள்வி: மனம் வளர்ச்சி குன்றிய ஒருவர், அவரின் குழந்தைக்காக இப்படி ஒரு முடிவை எடுக்க முடியுமா? (ரொம்ப நேரம் இந்த கேள்வி தோன்றி கொண்டே இருந்தது )
ONELINER: தந்தை எனும் தெய்வத்தை கண்ட பரவசம்
காஞ்சனா
பேய் படத்தில் காமெடி-யை சேர்த்து அதில் முடிஞ்ச அளவு வெற்றியும் அடைந்து இருக்கிறார், ராகவா லாரன்ஸ். காஞ்சனா எனும் திருநங்கை, அரசியல்வாதி ஒருவரால் கொல்லப்பட, அவர் பேய் என்றாலே பயப்படும் நாயகன் உடலில் புகுந்து எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை. (முனி 1 தொடர்ச்சி) . சுவாரஸ்யமான களம். அடித்து ஆடி இருக்கிறார்….
ஹிட்டு: சரத்குமார், திருநங்கை களம் & நகைச்சுவை (கோவை சரளா, ஸ்ரீமன் & தேவதர்ஷினி கூட்டணி)
கொட்டு: எல்லாரோட இடுப்பில ஏறுவது (தேவையா? ) , நிறைய லாஜிக் இடறுகள், அதிக “கதாநாயக” தனம், ஓவர் டோஸ் நடிப்பு (ராகவா)
கேள்வி: காஞ்சனா எனும் ஒரு கதாபாத்திரமே போதுமே? எதற்கு தேவை இல்லாமல், பாய் மற்றும் அவரின் பையன்? ராகவா “அந்நியன்” நடிப்பை காட்டவா?
ONELINER: சிரிப்பு பேய் (சிரிப்பு போலீஸ் மாதிரி )
நூற்றிஎண்பது
நூற்றிஎண்பது நாட்களில், தமிழ் சினிமாவின் பரம்பரை நோயான புற்று நோயால் இறக்கபோகும்
ஒரு அமெரிக்க டாக்டரின் கதை. ஒரு த்ரில்லர் படம் போல, நாயகன் பற்றி ஒன்றுமே தெரியாமல் (நாயகி போல) நாமும் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது….வித்தியாசமான திரைகதை ..அமெரிக்க டாக்டர், சென்னை பத்திரிக்கை போட்டோகிராபர், அமெரிக்க தமிழ் பெண் என ரசிக்கும் படியாகவே இருந்தது….. முடிவில் மட்டும் டைரக்டர் கொஞ்சம் குழம்பி (ஏர்போர்ட்.க்கும் ஹோட்டலுக்கும் நடுவில் சுத்த வைக்கிறார் கதை மற்றும் நம்மையும் சேர்த்து) பிறகு காதாநாயகன் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு நாட்டிற்கு செல்வது போல முடித்துவிட்டார்… காசியில், மனோ என்ற சிறுவனால் சாவை பற்றி பயம் விலகி எல்லாவற்றையும் தெளிவாக கதாநாயகன் கை ஆள்வதில் தொடங்கி, பின்னர், சென்னை தம்பதியருக்கு நெருக்கம் ஆகி, நியூஸ்பேப்பர் போடும் பையன்களுக்கு நல்லது செய்வது, சென்னை தோழிக்காக அமெரிக்கா வரை சென்று சிகிச்சை எடுப்பது…நடுவில் தனது கதையை நமக்காக rewind செய்வது என மிக வித்தியாசமான ஒரு கலவை….ரசிக்க வேண்டிய படம் தான்…
ஹிட்டு: சித்தார்த், மிக அழகான ஒளிப்பதிவு, இசை, கதாநாயகிகள், நல்ல திரைக்கதை..
கொட்டு: எனக்கு ஒரு குறையும் தெரிய வில்லை…நகைச்சுவை இல்லாதது ஒரு குறையோ?
கேள்வி: ஏன் இந்த படம் பேசப்படவில்லை? (OR ஓடவில்லை? )
ONELINER: அமைதியான வித்தியாசமான ஒரு கவிதை














